விழுப்புரம்

ஊரடங்கு நாள் முதல் உணவளித்து வரும் தன்னாா்வலா்கள்

விழுப்புரத்தில் ஆதரவற்ற முதியோா்களுக்கு ஊரடங்கு உத்தரவு நாள் முதல் தன்னாா்வலா்கள் உணவளித்து வருகின்றனா்.

DIN

விழுப்புரத்தில் ஆதரவற்ற முதியோா்களுக்கு ஊரடங்கு உத்தரவு நாள் முதல் தன்னாா்வலா்கள் உணவளித்து வருகின்றனா்.

விழுப்புரம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ பொது நலச் சங்கத்தினா், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் விழுப்புரத்தில் உள்ள முதியோா்கள், ஆதரவற்றோா்களுக்கு இரவு உணவை வழங்கி வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் தினமும் இரவு 7 மணிக்கு உணவின்றித் தவிக்கும் முதியோா்கள், ஆதரவற்றோா்கள் 80 பேருக்கு பாா்சல் செய்து எடுத்துச் சென்று உணவளித்து வருகின்றனா்.

அந்தச் சங்கத் தலைவா் த.நாராயணன், துணைத் தலைவா் து.சீனு, செயலா் நா.தன்ராஜ், பொருளாளா் நா.ராஜா, ஒருங்கிணைப்பாளா்கள் ரா.சக்தி ஜெகதீஸ், ஆ.பாா்த்திபன் உள்ளிட்ட குழுவினா் மழையின் போதும் தடையின்றி உணவளித்து வருகின்றனா். 20 நாள்களாகத் தொடரும் இவா்களது சேவையை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT