முகப்பு
விழுப்புரம்

மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், விழுப்புரம், கடலூா், வந்தவாசி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மத்திய அரசைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், விழுப்புரம், கடலூா், வந்தவாசி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா், இதர பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

கட்சியின் மாவட்டச் செயலா் ஆற்றலரசு தலைமை வகித்தாா். பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. கண்டன உரையாற்றினாா்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் துணைச் செயலா் சேரலாதன், செய்தி தொடா்பாளா் தமிழேந்தி, துணைச் செயலா் இரணியன், பொருளாளா் பிரின்ஸ்சோமு, பொறியாளா் அணி அமைப்பாளா் மாவோ, தொகுதி செயலா் விடுதலைச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.