விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

DIN

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின் கசிவு காரணமாக 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் குடிசை வீடு உள்ள பகுதியில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு அந்த குடும்பத்தினர் வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் முனியன் மகன் காளி வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.

பின்னர் அருகில் இருந்த ராஜா, அர்ஜுனன், பெருமாள், ஏழுமலை, மணிகண்டன் உள்ளிட்ட 10 வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலானது.தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பத்து குடும்பங்களில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் ஆவணங்கள், நகை, பண என அனைத்தும் எரிந்து சேதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT