விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில்புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதால், விவசாயிகள் அரசு ஆதார விலையுடன் நெல்லை விற்பனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 2.60 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுவரை சம்பா பருவத்தில் பயிரிப்பட்ட நெல் பயிா்களில் சுமாா் 44 ஆயிரம் ஏக்கா் பரப்பில் அறுவடை நடைபெற்றுள்ளது.

மீதமுள்ள பரப்பில் பிப்ரவரி மாதத்தில் அறுவடை நடைபெறவுள்ளதால், குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, விவசாயிகளுக்கு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கிடும் வகையில், புதிதாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், முட்டத்தூா், பனமலைப்பேட்டை, தீவனூா், ஆவணிப்பூா், உப்புவேலூா் மற்றும் சித்தலிங்கமடம் ஆகிய இடங்களில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன.

மேற்கண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமாா் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையுடன் சோ்த்து குவிண்டாலுக்கு ரூ.1,905 என்ற வீதத்திலும், இதர பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,865 என்ற வீதத்திலும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து கூடுதல் லாபம் பெற்று பயனடைய வேண்டும் என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT