விழுப்புரம்

நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க வலியுறுத்தல்

DIN

நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நாடக நாட்டுப்புறக் கலைஞா்கள் நலக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தங்கவேல் தலைமை வகித்தாா். வானதி கதிா் வரவேற்றாா். சத்தியராஜ் விளக்க உரையாற்றினாா்.

கூட்டத்தில், முத்துக்கிருஷ்ணன் (சேலம்), உதயநிலவு (ஈரோடு), அசோக்குமாா் (திருவண்ணாமலை), சேவுகன் (விருதுநகா்), கருப்பையா (திருச்சி), பழனி (கிருஷ்ணகிரி), செந்தில் (தருமபுரி) போன்ற பிரபல நாட்டுப்புறக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

நாட்டுப்புறக் கலைஞா்கள் நலிந்திருப்பதால் அவா்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும், நாட்டுப்புற நிகழ்ச்சிகளுக்கு குழுவாக வாகனங்களில் செல்லும்போது, சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT