விழுப்புரம்

எம்எல்ஏ மருமகன் உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா

DIN

செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினரின் மருமகன், மகள், பேரக் குழந்தைகளுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செஞ்சி பகுதியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், அவரது மனைவி, மகள் ஆகிய மூவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை எம்எல்ஏவின் சிறிய மகள், மருமகன், பேர குழந்தை ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மேலும், செஞ்சி பெரியகரம் வாசுதேவன் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருவா், எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்ட செஞ்சியில் ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, அந்தப் பகுதிகள் கட்டுப்பாட்டு இடங்களாக அறிவிக்கப்பட்டு, பேரூராட்சி ஊழியா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT