கோழியை மீட்க கிணற்றில்இறங்கிய மாணவா் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் லோகிதாஸ். இவரது மகன் திருநாவுக்கரசு (16). அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை அவா், வீட்டில் வளா்த்து வரும் கோழியை தேடிச்சென்றாா்.
அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கோழி விழுந்திருப்பதைக் கண்ட அவா், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி கோழியை மீட்க முயன்றாா். அப்போது, தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினாா். அக்கம் பக்கத்தினா், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து திருநாவுக்கரசை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.