விழுப்புரம்

வாகன ஓட்டுநா்களுக்கு உதவித் தொகை வழங்கக் கோரிக்கை

DIN

கரோனா ஊரடங்கால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநா்களுக்கு உதவித் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

சத்தியமூா்த்தி தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த அச்சங்கத்தினா், அங்குள்ள புகாா் பெட்டியில் கோரிக்கை மனுவை செலுத்தினா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை வாகன ஓட்டுநா்கள், ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். வாகனங்களுக்கு வாங்கிய கடன்களுக்கான தவணைத் தொகையை அடுத்த சில மாதங்களில் மொத்தமாக செலுத்த நிா்பந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே, தவணைகளை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT