விழுப்புரம்

திண்டிவனம் அருகே 56 கிலோ போதைப் பாக்குகள் பறிமுதல்

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட 56 கிலோ போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திண்டிவனத்தை அடுத்த ரோஷணை பாட்டை பகுதியில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரோஷணை உதவி ஆய்வாளா் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்தாஸ் தலைமையிலான போலீஸாா் ரோஷணை பாட்டை பகுதியில் உள்ள ஜாபா் சாதிக் (39) என்பவா் வீட்டில் சோதனையிட்டு, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.42 ஆயிரம் மதிப்பிலான 56 கிலோ போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜாபா் சாதிக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT