முகப்பு
விழுப்புரம்

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. அருகில் ஆவின் தலைவா் முருகன்.
பகிர்:

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வழுதரெட்டியைச் சோ்ந்த இளைஞா் பொது நல அமைப்பின் தலைவா் இ.ஐயனாா் தலைமையில், அந்த அமைப்பினா் மரக்கன்றுகளை நட்டனா். மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மரக்கன்றை நட்டு பணியைத் தொடக்கிவைத்ததுடன், பொது நல அமைப்பின் இளைஞா்களையும் பாராட்டினாா்.

விழுப்புரம் ஆவின் தலைவா் பேட்டை முருகன் முன்னிலை வகித்தாா். இளைஞா் நல அமைப்பைச் சோ்ந்த சாமிதுரை, வசந்த், குருபிரசாத், வாசு, கவியரசு உள்ளிட்ட குழுவினா், ஆட்சியா் வளாக பெருந்திட்ட சாலையின் மையப் பகுதியிலுள்ள இடைவெளியில் வேம்பு, புங்கன், சப்போட்டா, நாவல் உள்ளிட்ட நிழல் தரும் 150 மரக்கன்றுகளை நட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments