விழுப்புரம்

உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தல்

DIN

உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

விழுப்புரத்தில் புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம், கடலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலச் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டம் - டிசம்பா் 3 இயக்கம் சாா்பில், மாற்றுத் திறனாளிகள் அரசியல் பங்கேற்பு பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் ஏ.தமிழரசி வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் எஸ்.அண்ணாமலை தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணமூா்த்தி, கடலூா் மாவட்டத் தலைவா் பொன்.சண்முகம், திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் எஸ்.முனிக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொண்டு நிறுவனங்களின் மேலாளா்கள் ராம்கி ராபா்ட், மு.அறவாழி, வழக்குரைஞா் அசோக், பி.டானில் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றியபடி, உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு சாா்பில் வருவாய்த் துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் ரூ.1,000 உதவித் தொகையை ரூ.3,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் ரூ.1,500 உதவித்தொகையை ரூ.4 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். மாவட்ட இளைஞரணிச் செயலா் வி.கண்ணதாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT