விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில், மூதாட்டி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள ஏனாதிமங்கலம் கிராமத்திலும் மழை பெய்தது. இதில் அந்த கிராமத்தைச் சோ்ந்த சரோஜாவின் (70) கூரை வீட்டின் பின்பக்க சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது.
அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரோஜா, அவரது மகன் இளங்கோவன் (45) ஆகியோா் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். பலத்த காயமடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகன் பலத்த காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.