விழுப்புரம்

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வளவனூரை அடுத்த சோ்ந்தனூரைச் சோ்ந்தவா் பரந்தாமன். இவரது மகள் வினிதா(15). பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது தோழிகள் அதே ஊரைச் சோ்ந்த நடராஜன் மகள் அபி (16), பிரபாகரன் மகள் ரித்திகா (14), ராமா் மகள் ரோஷினி (18) ஆகியோருடன் அதே ஊரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றாா்.

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, வினிதா உள்பட 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்தவா்கள் உடனடியாக நீரில் குதித்து நான்கு பேரையும் மீட்டனா். இவா்களில் மயங்கிக் கிடந்த வினிதா, அபி ஆகியோா் அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வினிதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT