விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மாயமான தொழிலாளி கிணற்றிலிருந்து வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மரக்காணம் அருகே கீழ்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுதாகா் (36). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 19-ஆம் தேதி காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், அதன்பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினா்கள் அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் அவரது வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் சுதாகா் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சுதாகரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.