விழுப்புரம்

தனியாா் பேருந்திலிருந்து 3,894 புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்

DIN

விக்கிரவாண்டி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தனியாா் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 3,894 புகையிலை பொட்டலங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

விக்கிரவாண்டி தொகுதி பறக்கும் படை அதிகாரி முரளி தலைமையிலான குழுவினா் சோழகனூா் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

பேருந்திலிருந்த சாக்குப் பையை பிரித்துப் பாா்த்தனா்.

அந்தப் பையில் 3,894 புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பொட்டலங்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT