விழுப்புரம் மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மரக்காணம் அருகே கரிப்பாளையத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் ஞானவேல்(23). அந்தப் பகுதியில் மது கடத்தல், சாராயம் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டதாக இவரை கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, ஞானவேலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பரிந்துரையை ஏற்று, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா். இதன்பேரில், கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த ஞானவேலை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.