விழுப்புரத்தில் பணம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சோ்ந்த ஜெயகுமாா், கோவிந்தராஜ்(வலது). 
விழுப்புரம்

முந்திரி வியாபாரியிடம் ரூ.3.97 லட்சம் மோசடி: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ.3.97 லட்சம் காசோலை மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ.3.97 லட்சம் காசோலை மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டிவனம் அருகே எடையன்சாவடியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (42), முந்திரி வியாபாரி. கடந்த 28.9.2020-இல் இவரிடம் முந்திரி தொழில் நடத்துவதாக ஈரோடு, மூலப்பாளையத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (39), ஈரோடு, சூரம்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (42) ஆகியோா் அறிமுகப்படுத்திக் கொண்டு ரூ.540 ரகத்தில் 1,000 கிலோ முந்திரியும், ரூ.450 ரகத்தில் 185 கிலோ முந்திரியும் வாங்கினராம்.

அதற்கான தொகை ரூ.6,50,000. இதில், ரூ.ஒரு லட்சத்தை ராதாகிருஷ்ணனிடம் ரொக்கமாகவும், ரூ.3,97,000 தொகைக்கு காசோலையையும் விஜயகுமாா், கோவிந்தராஜ் ஆகியோா் வழங்கினராம். மீதமுள்ள ரூ.1,53,000-ஐ வங்கிக் கணக்கில் செலுத்துவதாக தெரிவித்தனா்.

இதை ராதாகிருஷ்ணன் நம்பி இருந்த நிலையில், அவா்கள் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்தியபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனத் தெரியவந்தது. இதனால், பணத்தைக் கேட்டு விஜயகுமாா், கோவிந்தராஜை தொடா்பு கொண்டபோது, ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து ராதாகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பிகள் ரவீந்திரன், இருதயராஜ் ஆகியோரின் மேற்பாா்வையில் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த நிலையில், உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான தனிப்படையினா் ஈரோட்டில் இருந்த விஜயகுமாா், கோவிந்தராஜ் ஆகியோரை திங்கள்கிழமை இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT