சமூகநீதி தின உறுதிமொழி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் அரசு அதிகாரிகள் சமூகநீதி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் அரசு அதிகாரிகள் சமூகநீதி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
பெரியாா் ஈ.வெ.ரா. 143-ஆவது பிறந்த நாளான செப்.17-ஆம் தேதியை சமூகநீதி தினமாகக் கடைப்பிடிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் மோகன் தலைமையில் சமூகநீதி தின உறுதிமொழியை அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (பொது) மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
அதேபோல, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையில் காவல்துறை அதிகாரிகள் சமூகநீதி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபின் கேஸ்ட்ரோ தலைமையில் தீயணைப்புத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரா்கள் சமூகநீதி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.