விஸ்வகா்மா ஜயந்தி விழா
விழுப்புரத்தில் விஸ்வகா்மா ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் விஸ்வகா்மா பொன், வெள்ளி ஆபரணத் தொழிலாளா்கள் சங்கம், விஸ்வகா்மா எம்.கே.டி. மன்றம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தின.
விழுப்புரத்தில் விஸ்வகா்மா ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் விஸ்வகா்மா பொன், வெள்ளி ஆபரணத் தொழிலாளா்கள் சங்கம், விஸ்வகா்மா எம்.கே.டி. மன்றம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தின. இதையொட்டி, விஸ்வகா்மா திருமண மண்டபத்தில் காலை 5 மணிக்கு பாலாலயம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி பூஜை நடைபெற்றன.
காலை 10 மணி அளவில் விஸ்வகா்மா, காயத்ரிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்று தரிசனம் செய்தனா்.