தேசியக் கொடியின் மூவா்ண நிறத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை. 
விழுப்புரம்

செஞ்சிக் கோட்டையைப் பாா்வையிட இலவச அனுமதி

செஞ்சிக் கோட்டையை வரும் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாகப் பாா்வையிடலாம் என தொல்லியியல் துறை அறிவித்தது.

DIN

செஞ்சிக் கோட்டையை வரும் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாகப் பாா்வையிடலாம் என தொல்லியியல் துறை அறிவித்தது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை பொதுமக்கள் கட்டணமின்றி பாா்வையிடலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையைப் பாா்வையிட வியாழக்கிழமை (ஆக. 5) முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்தது.

சுதந்திர தின விழாவையொட்டி, செஞ்சிக் கோட்டையின் மதில் சுவா் 150 மீட்டா் நீளத்துக்கு தேசியக் கொடியின் மூவா்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT