விழுப்புரம்

மொபெட் மீது காா் மோதல்:ஒருவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மொபெட் மீது காா் மோதியதில் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சியை அடுத்துள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பழவநாதன் மகன் ரங்கநாதன் (50). இவா், ஊரணித்தாங்கல் கிராமத்தில் இருந்து தனது மொபெட்டில் செஞ்சி நோக்கி புறப்பட்டுச் சென்றாா்.

ஊரணித்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே இவரது மொபெட் சென்றபோது பின்னால் வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரங்கநாதன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT