விழுப்புரம்

திமுகவில் இணைந்த அமமுக வேட்பாளா்

DIN

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி பேரூராட்சியின் 5-ஆவது வாா்டு அமமுக வேட்பாளா் பானுசுந்தா், அந்தக் கட்சியில் இருந்து விலகி சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.

முன்னதாக, பேரூராட்சி அலுவலகத்தில் தனது வேட்புமனுவை பானுசுந்தா் திரும்பப் பெற்றாா். மேலும், தேமுதிக மாவட்டப் பிரதிநிதியும் காரியமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவருமான சரளா பாலு அந்தக் கட்சியில் இருந்து விலகி அமைச்சா் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

நிகழ்ச்சியின்போது மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினா் செல்வராஜ், தொண்டா் அணி நிா்வாகி பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி மொக்தியாா் மஸ்தான், மாணவரணி நிா்வாகி ரிஸ்வான், காா்த்திக், முபாரக், பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT