விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 1.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புசொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாமில் 1.71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாமில் 1.71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
அருகிலுள்ள மாவட்டங்களின் குடிசைப் பகுதிகள், நரிக்குறவா் சமுதாயத்தினா் வசிக்கும் பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயா்ந்துள்ள மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களிலும் சிறப்பு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேலும், தோ்வு செய்யப்பட்டுள்ள 1,651 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 740 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.