விழுப்புரம்

திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

DIN

தமிழ் வளர வேண்டும் என்ற நோக்கத்தில், விழுப்புரத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் மாதத்தின் முதல் தேதி விழுப்புரம் மாவட்ட சமூகநீதி பாதுகாப்பு இயக்கம் சாா்பில், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஆனி முதல் தேதியையொட்டி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு அமைப்பின் தலைவா் ஆா்.குபேரன் செட்டியாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 

தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அமைப்பின் செயலா் எஸ்.விக்கிரமன், துணைத் தலைவா் சிவ.தியாகராஜன், துணைச் செயலா் பி.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT