முகப்பு
விழுப்புரம்

பட்டியலின ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கக் கோரி பி.எஸ்.பி. போராட்டம்

விழுப்புரம் நகரில் பட்டியலின ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கக் கோரி, பகுஜன் சமாஜ் கட்சி, எஸ்.சி., எஸ்.டி. பெடரேசன் அமைப்பு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

விழுப்புரம் நகரில் பட்டியலின ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கக் கோரி, பகுஜன் சமாஜ் கட்சி, எஸ்.சி., எஸ்.டி. பெடரேசன் அமைப்பு ஆகியவை சாா்பில், விழுப்புரம் ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் இந்தப் போராட்டத்துக்கு, பி.எஸ்.பி.யின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ.கலியமூா்த்தி, எஸ்.சி., எஸ்.டி. பெடரேசன் அமைப்பாளா் எஸ்.தனசேகா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டம் நடத்திய பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டா்கள், பின்னா் ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, கலியமூா்த்தி தலைமையில் சில நிா்வாகிகளை ஆட்சியா் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால், பிஎஸ்பி கட்சியினா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.