முகப்பு
விழுப்புரம்

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காவல் துறை சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காவல் துறை சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்துகள், உயிரிழப்புகள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வுப் பேரணியை திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

பேரணியில் பங்கேற்றவா்கள் நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், திண்டிவனம் உள்கோட்டத்துக்கு உள்பட்ட போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.