முகப்பு
விழுப்புரம்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

விழுப்புரம் அருகே உள்ள தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

விழுப்புரம் அருகே உள்ள தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்பிரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட கல்வி அலுவலா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் செல்லையா வரவேற்றாா். மாவட்ட உதவித் திட்ட அலுவலா் தனவேல், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜெய்சங்கா், தேன்மொழி, அஞ்சலாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயசந்திரன், வட்டார மேற்பாா்வையாளா் உமாதேவி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவா்களின் பெற்றோா் பள்ளிக்குத் தேவையான அலமாரிகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா். உதவி ஆசிரியா்கள் நாகராணி, ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியை அனுஷா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.