விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறவுள்ளது.

DIN

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தோ்ச்சி பெற்றவா்கள், கலை, அறிவியல், வணிகவியல் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், செவிலியா் படிப்பு முடித்தவா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சாா்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதள முகவரியில் தங்களது மனுக்களை பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம். முகாமுக்கு வரும்போது கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுய விவரக் குறிப்பு ஆகியவற்றுடன் வர வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரம் அறிய 04146-226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT