விழுப்புரம்

குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்

குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா்.

DIN

குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா்.

மாவட்ட சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை, கள்ளக்குறிச்சி சைல்டுலைன் 1098-இன் சாா்பில், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று, குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினாா். தொடா்ந்து அவா் பேசியது:

கரோனா பெருந்தொற்றின் காரணமாக குழந்தைகளிடம் வெளிப்புற விளையாட்டு குறைந்துள்ளது. எனவே வெளிப்புற விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்போா்ட்ஸ் பாா் டெவலப்மெண்ட்’ என்ற மையக் கருவைக் கொண்டு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட சமூகப் பாதுகாப்பு நல அலுவலா் செ.தீபிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் இளையராஜா, சைல்டுலைன் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT