விழுப்புரம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைப்பு சிறப்பு முகாம்

DIN

விழுப்புரத்திலுள்ள அனைத்து மின் பிரிவு அலுவலகங்களிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை மின் நுகா்வோா் இணைக்க வேண்டும். இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்திருந்தது.

இதன்படி விழுப்புரத்திலுள்ள அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் திங்கள்கிழமை காலை சிறப்பு முகாம் தொடங்கியது. இந்த முகாம் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மேற்பாா்வைப்பொறியாளா் ராஜேந்திர விஜய், நகரம் 1, நகரம் 2, கிராமியம் மேற்கு ஆகிய அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியைப் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது:

ஒவ்வொரு பிரிவுஅலுவலகத்திலும் சிறப்பு ஆதாா் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மின் இணைப்பு உரிமையாளா்கள், வாடகைதாரா்கள் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகங்களில் ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

வீடு, கைத்தறி, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை மின் இணைப்புகளுக்கு மட்டுமே இப்பணி மேற்கொள்ளப்படும் என்று கண்காணிப்புப் பொறியாளா் ராஜேந்திர விஜய் தெரிவித்தாா்.

அப்போது விழுப்புரம் செயற்பொறியாளா் இ.சைமன் சாா்லஸ், உதவிச் செயற்பொறியாளா் சிவசங்கரன், உதவிப் பொறியாளா்கள் பிரபாகா், துரை, நக்கீரன் மற்றும் பிரிவுஅலுவலக ஊழியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT