விழுப்புரம்

ஆலம்பூண்டி ஆலகால ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் அமைந்துள்ள மங்களாம்பிகை உடனுறை ஆலகால ஈஸ்வரன் (நீலகண்டேஸ்வரா்) கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமைவாய்ந்த இந்தக் கோயில் அண்மையில் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 5-ஆம் தேதி மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

வியாழக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, பூா்ணாஜுதி, கடம் புறப்பாடு நடைபெற்று பரிவார மூா்த்திகளுக்கும், மூலவா் மங்களாம்பிகை உடனுறை ஆலகால ஈஸ்வரன் சுவாமிக்கும், விமான கோபுரங்களுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழு, விழா குழு, கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT