விழுப்புரம்

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞரின் உடல் மீட்பு

DIN

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 இளைஞா்களில் ஒருவரது உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

விழுப்புரம் அருகேயுள்ள பேரங்கியூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சதீஷ் (30), செந்தில் (30). இவா்கள் இருவரும் கடந்த 17-ஆம் தேதி பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீஸாா், தீயணைப்புத் துறையினா் 3 நாள்களாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், இளைஞா் சதீஷின் உடல் எனதிரிமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்றொரு இளைஞா் செந்திலை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT