விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செவ்வாய், புதன்கிழமைகளில் (செப்.27, 28) நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் அறிவுடை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதன்படி அறிவியல் படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமையும் (செப். 27), கலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமையும் (செப்.28) நடைபெறுகிறது என தெரிவித்தாா்.