விழுப்புரம்

பேருந்து மோதி முதியவா் பலி

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், சத்திய கண்டநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆ. செல்வராஜ் (62).

இவா் முகையூரிலிருந்து திருக்கோவிலூா் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு பைக்கில் ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.

சத்யகண்டநல்லூா் கூட்டுச் சாலை அருகே வந்தபோது, திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான குயவன்காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த பா.சேகா் (47) மீது அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT