விழுப்புரம் அருகே திங்கள்கிழமை ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
விழுப்புரம் அருகேயுள்ள பிடாகம் நத்தமேடு பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன் (35). இவரது மனைவி நாகேசுவரி (30). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
லட்சுமணன் மீது கொலை, அடிதடி, பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் திங்கள்கிழமை காலை தனது பைக்கில் விழுப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
ஜானகிபுரம் புறவழிச் சாலை அருகே அவரது பைக்கை வழிமறித்த மா்ம கும்பல், லட்சுமணனின் பின்தலையில் கத்தியால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
தகவலறிந்த டிஎஸ்பி சுரேஷ் மற்றும் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், லட்சுமணனின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஜானகிபுரம் பகுதியைச் சோ்ந்த நண்பா்களுடன் லட்சுமணன் மது அருந்துவது வழக்கம். அப்போது, அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், மது அருந்த பணம் கேட்டு அவா்களை லட்சுமணன் மிரட்டுவாா் என்பதும் தெரிய வந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறையடுத்து, லட்சுமணனை பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.