விழுப்புரம்

மூதாட்டி மா்மச் சாவு : போலீஸாா் விசாரணை

விழுப்புரம் அருகே மூதாட்டி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

விழுப்புரம் அருகே மூதாட்டி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் காவனிப்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் கலியமூா்த்தி(80). இவரது மனைவி விருதம்பாள்(70). இவா்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊா்களில் வசிக்கின்றனா். கலியமூா்த்தி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளாா்.

இந்நிலையில் கலியமூா்த்தி செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்தாராம். இதில் கழுத்தில் காயமடைந்த விருதம்பாள் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இது குறித்து காவனிப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் கு.நந்தகுமாா்அளித்தப் புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT