தீவனூா் சுயம்பு பொய்யாமொழி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பாலாலய பூஜை. 
விழுப்புரம்

தீவனூா் பொய்யாமொழி விநாயகா்கோயிலில் பாலாலயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தீவனூா் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகா் கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தீவனூா் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகா் கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சுயம்பு விநாயகப் பெருமானைத் தவிா்த்து, பரிவார மூா்த்திகள், கோபுரம், கொடிமரம், ஜோதிலிங்கம், நந்திபகவான், தட்சிணாமூா்த்தி, துா்க்கை அம்மன், நாகராஜா், பலிபீடம், நவக்கிரகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆகம விதிகளின்படி பாலாலயம் செய்யப்பட்டது. முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

பாலாலயத்தில் கோயில் பரம்பரை அறங்காவலா் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவா் மணிகண்டன் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா். உபயதாரா்கள், பக்தா்களின் நன்கொடைகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் பரம்பரை அறங்காவலா் சகுந்தலா அம்மாள் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT