விழுப்புரம்

மாநில கால்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 18 போ் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

DIN

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 18 போ் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

இந்தப் பள்ளி மாணவிகள் அணியினா் கால்பந்து போட்டியில் மகளிா் பிரிவில் குறுமைய அளவிலும், மாவட்ட அளவிலும் விளையாடி முதலிடம் பெற்றனா். இதையடுத்து வரும் டிசம்பா் 2-ஆம் தேதி திருச்சியில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். இதையடுத்து, சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி கால்பந்து அணி மாணவிகள் 18 போ் மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை அண்மையில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது மாணவிகள் தங்களுக்கு கால்பந்துப் போட்டிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கித் தருமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனா்.

இந்த நிலையில், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் 18 மாணவிகளுக்கும் ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். மேலும் திருச்சியில் நடைபெறும் மாநில கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றால் மாணவிகள் அனைவரையும் தனது சொந்த செலவில் கல்விச் சுற்றுலா அனுப்பி வைப்பதாக கூறினாா்.

அப்போது சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜீவேந்திரன், உடல்கல்வி ஆசிரியா்கள் ஆனந்தராஜ், பழனிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT