கல்வராயன்மலை அருகே கஞ்சா செடி பயிரிட்ட இருவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே மலை உச்சியில் கஞ்சா செடி பயிரிட்டதாக இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே மலை உச்சியில் கஞ்சா செடி பயிரிட்டதாக இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கல்வராயன்மலை பெருமாநத்தம் கிராமத்தில் மலை உச்சியில் அனுமதியின்றி கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கரியாலூா் காவல் உதவி ஆய்வாளா் மணிபாரதி, தனிப்பிரிவுக் காவலா் பிரபு ஆகியோா் தலைமையில், சிறப்பு அதிரடிப் படையினா் அந்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில் மலை உச்சியில் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 100 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை கண்டுபிடித்து போலீஸாா் கைப்பற்றினா்.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பா்வதம், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.