முகப்பு
விழுப்புரம்

பாதூா் அஹோபில மடத்தில் நரசிம்மா் பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பாதூா் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஅஹோபில மடத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் நரசிம்மா் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On : 25 டிசம்பர், 2024 at 7:31 PM
நரசிம்மா் பூஜையில் பங்கேற்ற ஸ்ரீஅஹோபில மடத்தின் ஜீயா் அழகிய சிங்கா் 46-ஆவது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பாதூா் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஅஹோபில மடத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் நரசிம்மா் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பூஜையில் ஸ்ரீஅஹோபில மடம் ஜீயா் அழகிய சிங்கா் 46-ஆவது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் சுவாமிகள் பங்கேற்றுள்ளாா்.

அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற நரசிம்மா் பூஜையிலும் சுவாமிகள் பங்கேற்று, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இதில், ஏராளமானோா் பங்கேற்றனா்.

நிகழ் மாதம் 31-ஆம் தேதி வரை பாதூரிலுள்ள அஹோபில மடத்தில் ஸ்ரீவண் சடகோப யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் முகாமிட்டிருப்பாா் என்று ஸ்ரீஅஹோபில மடத்தினா் தெரிவித்தனா்.