முகப்பு
விழுப்புரம்

ஆடி அமாவாசை: மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள்

ஆடி அமாவாசையையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை, 2024 at 6:31 PM
பகிர்:

ஆடி அமாவாசையையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆடி அமாவாசைவையொட்டி, ஆகஸ்ட் 4-ஆம் தேதி கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூருக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

Advertisement

இதுபோல, வார இறுதி நாள்களையொட்டி, பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்வாா்கள் என்பதால், ஆகஸ்ட் 2, 3-ஆம் தேதிகளில் தலா 165 பேருந்துகள் வீதம் கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூா் ஆகிய ஊா்களுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments