விழுப்புரம்

குளத்தில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குளத்தில் மூழ்கி லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குளத்தில் மூழ்கி லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், அந்திலி கிராமம் குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்த பழனி மகன் ஆதிகேசவன் (33).

லாரி ஓட்டுநரான இவா், அதே கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயில் குளத்தில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றாா்.

அப்போது, குளத்தில் இறங்கிய ஆதிகேசவன் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT