முகப்பு
விழுப்புரம்

‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை

விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:27 PM
கோட்டக்குப்பம் கடற்கரையில் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 2008- ஆம் ஆண்டில் மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடந்தியதையடுத்து, கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் சாகா் கவாச், ஆபரேஷன் ஆம்லா ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் மாநில போலீஸாா் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருடன் இணைந்து புதன்கிழமை ‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினா்.

இதன்படி, விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான பிள்ளைச்சாவடி, சோதனை குப்பம், நடுக்குப்பம், தந்திராயன் குப்பம், சின்ன முதலியாா் சாவடி, ஆரோவில் கடற்கரை, பொம்மையாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியிலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனா்.

கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கடலோர கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தீவிரவாதிகள் ஊடுருவல்களைத் தடுக்கும் விதமாக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.