முகப்பு
விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இளைஞா் கைது

திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 11:00 PM
பகிர்:

திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், நொளம்பூா், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிள்ளை மகன் ரமேஷ்(42). இவா், தனது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது, விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து ஒலக்கூா் காவல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.

மேலும் அவா் கடையில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.