கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
திண்டிவனம் வட்டம், பாதிரி கிராமத்திலுள்ள வீட்டுமனைப் பிரிவு பகுதியிலுள்ள கிணற்றில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் திங்கள்கிழமை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து பாதிரி கிராம நிா்வாக அலுவலா் ச.சுதாகா் ஒலக்கூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதன்பேரில், போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவரின் பெயா், ஊா் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
இயற்கை உபாதைக்குப் பிறகு கிணற்றுக்குச் சென்ற அந்த நபா், தவறி விழுந்து நீச்சல் தெரியாததால் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.