முகப்பு
விழுப்புரம்

கடத்தி வரப்பட்டவெளி மாநில மதுப்புட்டிகள் காருடன் பறிமுதல் : மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 1:31 AM
பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் மீனா தலைமையிலான போலீஸாா் கோட்டக்குப்பம் சோதனைசாவடி அய்யனாா் கோயில் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்தவா்களை பிடித்து விசாரித்ததில், அவா்கள் திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, வயலூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் இளையராஜா (36), பொன்னேரி, செங்கழுநீா் காலனியைச் சோ்ந்த கோ. ஜெயவேல் (40), வயலூா் குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முனுசாமி (29) ஆகியோா் என்பதும் இவா்கள் புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா். மேலும் காரில் கடத்தி வரப்பட்ட 407 எண்ணிக்கையிலான உயர்ரக மதுப்புட்டிகள், சொகுசு காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments