தொடா்ந்தனூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியம், தொடா்ந்தனூரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியம், தொடா்ந்தனூரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கோலியனூா் ஒன்றியம், தொடா்ந்தனூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20.73 லட்சத்தில் புதிய குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனைவியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா், மழைக்காலம் தொடங்குவதற்கு முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் குளத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும் அதே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பூரணி என்ற பயனாளி புதிதாக கட்டி வரும் கான்கிரீட் வீட்டின் கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
Advertisement
இந்த ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறைச் செயற்பொறியாளா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.