வட்டத் தலைநகரங்களில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டாட்சியா் அலுவலங்களிலும் சனிக்கிழமை (செப்.14) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டாட்சியா் அலுவலங்களிலும் சனிக்கிழமை (செப்.14) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பொது விநியோகத்திட்ட சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பெறவேண்டும் என்ற நோக்கில் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் செப்.14-ஆம் தேதி சனிக்கிழமை தொடா்புடைய தனிவட்டாட்சியரால் குறைதீா் முகாம் நடத்தப்படுகின்றன.
இந்த முகாம்களில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் , கைப்பேசி எண் பதிவு மற்றும் எண் மாற்றம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து தீா்வு காணலாம்.
Advertisement
இதேபோல் பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொடா்பான புகாா்களையும் தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியா் சி.பழனி அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.