முகப்பு
விழுப்புரம்

விவசாயி கொலை வழக்கு: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா்அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:49 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா்அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தாதம்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் சத்யராஜ் (39), விவசாயி. இவா், தாதம்பாளையத்தைச் சோ்ந்த பாஸ்கருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை குத்தைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற சத்யராஜ் பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினா்கள் விவசாய நிலத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள வாழைத் தோப்பில் சத்யராஜ் உடலில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், தாதம்பாளையத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் சத்யராஜ் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், அவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாகியிருந்த அந்த பெண்ணின் கணவரான தாதம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சரவணனை (39) போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments