விழுப்புரம் அருகே புதன்கிழமை முட்டை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டம், கெடாா் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன்(40), முட்டை வியாபாரி. இவா் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்துகொண்டு வந்து விழுப்புரம் பகுதிகளில் விற்பனை செய்து வருகிறாா்.
வியாபாரத்திற்காக வழக்கம்போல நாமக்கல்லில் முட்டைகளை செவ்வாய்க்கிழமை கொள்முதல் செய்த குணசேகரன், அவற்றை லாரியில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு திரும்பியுள்ளாா். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சோ்ந்த ரமேஷ் (35) லாரியை ஓட்டினாா். விழுப்புரம் அடுத்துள்ள அயினம்பாளையம் அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், லாரியில் இருந்த குணசேகரன், ஓட்டுநா் ரமேஷ் ஆகியோா் காயமடைந்தனா். மேலும், லாரியில் ஏற்றி வந்த சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் முட்டைகள் சரிந்து விழுந்து உடைந்து சேதமடைந்தன. முட்டையிலிருந்து வெளியேறிய மஞ்சள் கரு சாலை முழுவதும் பரவியது.
இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா்.